Monday, March 29, 2010

558.சென்னை அணியின் 4வது தொடர் தோல்வி -CSK vs RR

சென்னை தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததால், ராஜஸ்தானுடன் ஆன போட்டியில் சூடு பறக்கும் என்று எண்ணினேன்! ஆனால், தோல்விக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் இல்லை என்று சென்னை அணி கேவலமாக விளையாடி தோற்றது!
முதலில் ராஜஸ்தான் அணி பேட் செய்தது, முதலில் நிதானமாக ஆடிய ஓஜா, பிறகு எல்லா போலர்களையும் ஒரு வாங்கு வாங்கியதில், 11 ஓவர்களில் ஸ்கோர் 100-1. யூசுப் பதான் இன்னும் களமிறங்காத நிலையில், ராஜஸ்தான் 200 தொடுவார்கள் என்று தான் எண்ணினேன். சிறப்பாக பந்து வீசிய ஜகதியின் பந்தில், பதான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஓஜா, 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தது ஹைலைட், அது போல, நன்றாக பந்து வீசக்கூடிய மார்க்கல், 4 ஓவர்களில் 46 ரன்கள் வாரி வழங்கியது ஒரு கரும்புள்ளி. இருந்தாலும், 177 ரன்கள் என்பது தோனி, ரெய்னா, ஹெய்டன் உள்ள சென்னைக்கு கடின இலக்காகத் தோன்றவில்லை!

ஹெய்டன் சீக்கிரமே அவுட் ஆனாலும், விஜய் நன்றாகவே ஆடினார். நர்வாலின் ஒரு ஓவரில் விஜய் 26 ரன்கள் குவித்தது ஹைலைட். 75-2 (8.4) என்ற நிலையில், இல்லாத ரன்னுக்கு ஸ்டார்ட் கொடுத்து, கிரிஸூக்குத் திரும்ப முடியாமல், விஜய் அனாவசிய ரன்-அவுட்! விஜய்யைப் போலவே, மூளையை அடகு வைத்து, ரெய்னா வார்ன் பந்தில் Clean Bowled! 79-3 (9.4). தோனி இருந்ததால் நம்பிக்கை இருந்தது, ரன்ரேட் 9.7 ஆக இருந்தாலும்!

ஒரு கட்டத்தில், ரன்ரேட் 12க்கு மேலே சென்றது, இருந்தும் நம்பிக்கை இருந்தது தோனி மேல்! தமிழ்நாட்டுச்சிங்கம், domestic ஆட்டப்புலி பத்ரி, ரன் எடுக்கையில் தோனி மீது மோதி, அவர் மட்டையையும் தட்டி விட்டதில், தோனி ரன்அவுட். சென்னைக்கு ஆப்பு உறுதியானது!
மார்க்கல், வார்ன் ஓவரில் (18வது) 3 சிக்ஸர்கள் அடித்து ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனாலும், அடுத்த ஓவர் வீசப்போவது வேகப்பந்து வீச்சாளர் டைட் என்பதால், வெல்வது கடினம் என்று புரிந்தது! டைட் மார்க்கலை அவுட்டாக்கினார், 160-ல் சென்னை சுருண்டது! டைட் பந்து வீச்சு அபாரம்: 4-0-22-2. திரிவேதியும் தனது 4 ஓவர்களில் 16 ரன்களே கொடுத்தார்!

தோனி பத்ரிக்கு முன்னால், மார்க்கலை பேட் செய்ய அனுப்பியிருக்க வேண்டும். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் விழும்போது தான், இன்னிங்சை சீர்படுத்த பத்ரியை அனுப்புவது பயன் தரும்! அடுத்த ஆட்டத்தில் மார்க்கலை சற்று முன்னால் ஆட அனுப்பினால் நல்லது என்று தோன்றுகிறது!

"லோக்கல்" வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது தான், சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கியக் காரணம். இத்தோல்விக்கு (நன்றாக ஆடிக் கொண்டிருந்தபோது!) தன்னைத்தானே ரன்அவுட் செய்து கொண்ட விஜய்யும், தோனியை ரன்அவுட் செய்த பத்ரியும் அதிமுக்கியக் காரணங்கள்! Batsmen who get good starts should carry on to win the game! இப்படி நான் சொன்னது, டிவிட்டரில் உலவும் தமிழ்ப்பாசம் மிக்க, "வருத்தப்படாத" வாலிபர் ஒருவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தினால் நான் என்ன செய்ய ;-)

அடுத்து நடந்த MI vs DC ஆட்டத்தில், 16 பந்துகளில் 49 ரன்கள் விளாசிய ஹர்பஜனிடமிருந்து சென்னை அணியின் லோக்கல் மட்டையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது! திறமை மட்டுமே போதாது, மனஉறுதியும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு மிக அவசியமான குணங்கள்.

ஒரு பந்துவீச்சாளரோ/ மட்டையாளரோ ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணியின் வெற்றிக்கு தனிக்காரணமாக விளங்க T-20-இல் (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களைக் காட்டிலும்) சாத்தியங்கள் அதிகம்! எல்லாரும் சிறப்பாக ஆடும்போது, தானும் கலக்குவது பெரிய விஷயமில்லை என்பதை சென்னை "லோக்கல்" வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Even if one fails in couple of matches, when he rises to the occasion when the chips are down and ensures victory in the 3rd match, his failures can be ignored! But, unfortunately that is not the case with the CSK's Local players :-(

எ.அ.பாலா

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test Comment !

dondu(#11168674346665545885) said...

when he raises to the occasion --> when he rises to the occasion

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஸ்ரீ.... said...

பதிவுலகத்துல எல்லாத்துலயும் முன்னாடி இருப்பீங்க. ஏன் சந்திப்புக்கு வரல? அது சம்பந்தமா ஏதாவது வருத்தமா? உங்க நிலைப்பாடு என்னன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.

ஸ்ரீ....

enRenRum-anbudan.BALA said...

நன்றி, ராகவன் சார், தவறைச் சுட்டியமைக்கு!

திருத்தி விட்டேன்.


ஸ்ரீ,

பெரிய கூட்டங்களுக்கு நான் வரதில்லை! மற்றபடி, நான் இப்ப "Almost Retired" பதிவர் அல்லது "part-time" பதிவர் :-)

தொடர்ந்து தாங்கள் என் இடுகைகளை வாசிப்பதற்கும், இந்த விசாரிப்புக்கும் என் நன்றி.

என் நிலைப்பாடு பற்றி என்ன? நீங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்ப் பதிவுலகத்தை மேலும் மேம்படுத்தினால், மகிழ்ச்சி தான்!

Naresh Kumar said...

தோனியின் அவுட்டிற்கு ஒட்டு மொத்தமாக பத்ரியை மட்டும் குற்றம் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை...என்னைப் பொறுத்த வரை இருவருமே தவறு செய்தார்கள்!!!

இன்னொரு தவ்று தொடர்ச்சியாக ஜோகிந்தர் சர்மாவிற்கு வாய்ப்பு தருவது ஏன்?? ஆல்ரவுண்டர் கணபதிக்கோ, போன போட்டியில் ஒழுங்காக விளையாடிய சுதீப் தியாகிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என தெரியவில்லை!!!

A Simple Man said...

Dhoni struggles to form a winning combination.Big worry is this'll continue for him in W-T20 as well.

A Simple Man said...

CSK won today thanks to Dhoni's wicket on 17th over :-)

A Simple Man said...

பாலா சார், நம்ம பக்கம் ஒரு எட்டு வந்து உங்கள் பொற்கரங்களால் ஒரு பின்னூட்டாமிட்டால் தன்யனாவேன். ஸ்ஸ்...அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே :-)

http://iamverysimple.blogspot.com/2010/04/2010-day-23.html

A Simple Man said...

ஜெயிச்ச மேட்ச் பத்தியும் பதிவு எழுதுங்க சார். CSK ஆதரவாளர்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் :-))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails